அனுமதியின்றி சேவல் சண்டை: 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார்

கரூரில் அனுமதியின்றி சேவல் சண்டையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து 10 இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

திருமாநிலையூரில் உள்ள குடோன் அருகே சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்த கும்பல் காட்டுக்குள் ஓடி ஒளிந்தது. பாலாஜி என்பவரை மட்டும் கைது செய்த போலீசார், அங்கிருந்த 10 பைக்குகள், 3 சண்டை சேவல்கள் மற்றும் சேவல் காலில் கட்டப்படும் கத்திகளை பறிமுதல் செய்தனர்.

Translate »
error: Content is protected !!