வாகை சூடியிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அணி, கர்நாடகா அணியை எதிர்கொண்டது. இதில் தமிழ்நாடு அணி 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தமிழக அணி சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை தொடர்ந்து 2வது முறையாக கைப்பற்றியது. இந்நிலையில், சையது முஷ்டாக் அலி கோப்பையை வென்ற தமிழக அணிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,

சையத் முஷ்டாக் அலி கோப்பை-இல் தொடர்ந்து 2வது முறையாக வாகை சூடியிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு என்னுடைய வாழ்த்துகள்!

ஷாருக் கான், சாய் கிஷோர் உள்ளிட்ட இளம் திறமையாளர்கள் சிறப்பான – துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எல்லோரும் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்! என தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!