குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழக காவல்துறை

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து தேவையற்ற யூகங்கள் மற்றும் கருத்துக்களை பரப்ப வேண்டாம் என இந்திய விமானப்படை கேட்டுக் கொண்டுள்ளது. இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக போலீசார் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து தெரிவித்த ஷிபின் என்ற இளைஞரை கன்னியாகுமரி மாவட்ட போலீசார் கைது செய்தனர்.

Translate »
error: Content is protected !!