இங்கிலாந்தில் 43,931 பேருக்கு கொரோனா பாதிப்பு

இங்கிலாந்து நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாட்டில் 43,931 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 88,97,149 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 207 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாலி எண்ணிக்கை 1,40,041 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 8,801 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!