குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததில் பீரோவில் இருந்த ரூ.10 லட்சம் எரிந்தது

தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை அருகே குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததில் பீரோவில் இருந்த 10 லட்சம் ரூபாய் பணம் எரிந்து சாம்பலானது.

சூர்யா பேட்டை அருகேயுள்ள நேலமரி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமனய்யா. இவர் தனது மகள் திருமணத்திற்காக நிலத்தை விற்று, 10 லட்சம் ரூபாய் பணத்தை பீரோவில் வைத்திருந்துள்ளார். நேற்று அவரது மனைவி சமைத்துக் கொண்டிருந்த போது தீப்பொறி பறந்து, வீட்டின் கூரை மீது விழுந்துள்ளது.

வீடு தீப்பிடித்து எரிந்த நிலையில், அக்கம் பக்கதினர் தீயை அணைக்க முயன்றும், குடிசை முழுவதுமாக எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த பீரோவை வெளியில் எடுத்து வந்து பார்த்தபோது, அதில் இருந்த துணிகள் கருகிய நிலையில், பணமும் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகி இருந்தது தெரியவந்தது.

Translate »
error: Content is protected !!