கொரோனா குறைந்தவுடன் வாரத்தில் 7 நாட்கள் கோவில் திறக்கப்படும் – அமைச்சர் அதிரடி

கொரோனா குறைந்தவுடன் வாரத்தில் 7 நாட்களும் பக்தர்களுக்காக கோயில்கள் திறக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கொரோனா குறைந்தவுடன் வாரத்தில் 7 நாட்களும் பக்தர்களுக்காக கோயில் திறக்கப்படும் என கூறினார்.

மேலும், ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படிதான் வாரத்தில் 3 நாள் கோயில்கள் மூடப்பட்டுள்ளன என்றும், 4 நாட்கள் கோயில்கள் திறக்கப்படும் நிலையில் பாஜக போராட்டத்தால் பக்தர்கள் வழிபாடு ஒருநாள் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!