தீபாவளி பண்டிகைக்கு பேருந்துகளில் டிக்கெட்டுகள் முன்பதிவு

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். அதன்படி சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் முதல், அதிகபட்சமாக 3 ஆயிரத்து 200 வரை கட்டணம் உயர்ந்துள்ளது.

அதே போல், திருநெல்வேலிக்கு அதிகபட்சமாக 3 ஆயிரத்து 950 ரூபாயும், மதுரைக்கு 3 ஆயிரத்து100 வரையும் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, இரண்டு முதல் மூன்று மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!