கேரள முதல்வரை சந்தித்து ஸ்டாலின் அளித்த கடிதம் வழங்கல்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை வழங்கினார்.

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது எனவும், அதனை ரத்து செய்திட, மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென, 12 மாநில முதல்வர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் கேரள முதல்வர் பினராஜி விஜயனை நேரில் சந்தித்து கடிதத்தை வழங்கிய டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., ‘நீட் தேர்வு’ குறித்த ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரைகளையும் வழங்கினார்.

அப்போது, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், கேரள மாநில தி.மு.க. அமைப்பாளர் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Translate »
error: Content is protected !!