நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் – பிரேமலதா விஜயகாந்த்

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை ஆன இன்று சென்னை புனித தோமையார் மலை தேவாலயத்தில் வழிபாடு நடத்திய பிரேமலதா விஜயகாந்த், 50துக்கும் மேற்பட்டோருக்கு இனிப்புகள் மற்றும் பிரியாணி பொட்டலங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்கப் போவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. தேமுதிகவில் ‘செயல் தலைவர்’ பொறுப்பை ஏற்படுத்துவது குறித்து விஜயகாந்த் பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அவர் கூறினார்.

Translate »
error: Content is protected !!