புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேசன் கடைகளை திறக்க வலியுறுத்தி திமுகவினர் போராட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் கடைகளை நிரந்தரமாக மூடும் முடிவை கைவிட வலியுறுத்தியும், மூடப்பட்டுள்ள ரேஷன் கடையை திறக்க வேண்டும், ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான இரா.சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 1000 க்கும் மேற்பட்ட திமுகவினர் புதுச்சேரி பாக்கமுடையான்பட்டு பகுதியில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!