அரசு அதிகாரிகளை மிரட்டிய போலி லஞ்ச ஒழிப்பு அதிகாரி கைது

சென்னையில், அரசு அதிகாரிகளை மிரட்டிய போலி லஞ்ச ஒழிப்பு அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

கோயம்பேட்டில் உள்ள பெருநகர வளர்ச்சி குழுமம்  பொறியாளர் ராஜன் பாபுவிடம்  சின்னையன் தான் லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் என கூறி அவரின் வீட்டை சோதனை நடத்தி பீரோவில் இருந்த 6 ஆயிரம் ரூபாய் எடுத்துகொண்டு தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.

இதேபோல் தரமணி  உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தில் தலைமை பொறியாளராக  உள்ள அசோகனையும் இவர் மிரட்டியுள்ளார். புகாரின் பேரில்  மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த சின்னையனை போலீசார் கைது செய்தனர்.

Translate »
error: Content is protected !!