முதல் மனைவிக்கு பெற்ற மகனை அடிக்கும் தந்தை

 

தெலங்கானா அருகே 3 வயது சிறுவனை, தந்தை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் ஓட்டுனராக நாகராஜ் என்பவர் பணியாற்ற்கிறார். இவருக்கு திருமணமாகி முதல் மனைவி உயிரிழந்த நிலையில், இரண்டாவதாக திருமணம் செய்தார். இந்நிலையில் முதல் மனைவியின் 3 வயது மகனை இரண்டாவது மனைவி முன், தந்தை கொடூரமாக தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. சிறுவனை தந்தை தாக்கும் போது, இரண்டாவது மனைவி சிரிப்பது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், நாகராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!