சென்னை போலீஸ் ஆணையர் சங்கர் ஜிவால் உட்பட 5 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு

5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபிகளாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றமும் மற்றும் 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டது.

டிஜிபியாக பதவி உயர்வு பெற்றாலும், சங்கர் ஜிவால் சென்னை போலீஸ் கமிஷனராக தொடருவார். டிஜிபியாக பதவி உயர்வு பெற்ற ஆபாஷ்குமார், குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவில் தொடருவார்.
டிஜிபியாக பதவி உயர்வு பெற்ற ஏ.கே.விஸ்வநாதன், வீட்டு வசதி கழகத்தின் டிஜிபியாக தொடருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!