முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்ல சாவி தீபா, தீபக்கிடம் ஒப்படைப்பு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்ல சாவி தீபா, தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி சாவியை ஒப்படைத்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியது:

என் வாழ்க்கையில் இப்படி ஒரு திருப்பத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. வீட்டை மீட்க என்னால் முடிந்த அளவு முயற்சி செய்தேன். வேதா இல்லத்தில் தங்க முடிவு செய்துள்ளோம். வீட்டு சாவியை பெற்று கொண்டேன் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடையும் என்றார்.

Translate »
error: Content is protected !!