சென்னை விமான நிலையத்தில் ரூ.1.16 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்திற்கு துபாய், சாாஜா விமானங்களில் வந்த பயணிகளிடம் இருந்து ரூ.1.16 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயிலிருந்து மற்றும் சாா்ஜாவிலிருந்து சென்னை வந்த விமானங்களில் வந்த பயணிகளை சோதனை செய்தனர். அப்போது சென்னை, ராமநாதபுரம், ஆந்திரா மற்றும் திருச்சியை சோ்ந்த 4 ஆண்கள், ஒரு பெண் ஆகிய 5 போ் தங்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த 10 பாா்சல்களை கைப்பற்றினா். அதில் இருந்து ரூ.1.16 கோடி மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Translate »
error: Content is protected !!