துணை நிலை ஆளுநர் தமிழிசை பேட்டி

புதுச்சேரி அரசு மருத்துவமனை உலக தரம் வாய்ந்த மருத்துவமனைகளாக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது என துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மருத்துவமனையில் ஏழை எளிய  நோயாளிகள் எல்லா சேவைகளையும் திவிரப்படுத்தும் நடவடிக்கைகள் எடுத்து வரப்பட்டு வருகிறது என்றார். மேலும் அரசு கூறி வரும் வழிமுறைகள் பின்பற்றி தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் எனவும் நோய் அறிகுறி உள்ள சோதனைகளை உடனடியாக வழங்கப்படும், காலதாமதம் செய்வதில்லை எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் நபர்கள் வரை கொரோனா சோதனை செய்யப்படுகிறது என்ற அவர், புதுச்சேரி அரசு மருத்துவமனை உலக தரம் வாய்ந்த மருத்துவமனைகளாக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறினார்.

Translate »
error: Content is protected !!