சென்னையில் பல்வேறு இடங்களில் மீண்டும் கனமழை..

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். மேலும் சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. தாம்பரம், மாம்பலம், எழும்பூர், புரசைவாக்கம், மெரினா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

Translate »
error: Content is protected !!