வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

வடகிழக்கு பருவமழை காரணமாக மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தென் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!