மும்பையில் இன்றும், நாளையும் கனமழையும் பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மும்பையில் தற்போது பருவமழை தொடங்கியுள்ளது. தொடங்கிய பருவமழை அடுத்த மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அடுத்த சில நாட்களுக்கு நகரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இன்று (திங்கட்கிழமை) கனமழையும், நாளை கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மஞ்சள் எச்சரிக்கையும், நாளை ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பால்கரில் நாளை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பால்கர் மற்றும் தானேவில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!