திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிமூட்டம்..!

திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான பனிமூட்டம் இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக சாலைகள் முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்தது. நேற்று இரவு முதலே கடும் பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சாலைகள் தெளிவாக இல்லாததால் முகப்பு விளக்குகள் எரியவிட்டபடி வாகனங்கள் மெதுவாக செல்கின்றன. இன்று காலை 8 மணி அளவில் கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னையில் இருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் செல்லும் புறநகர் ரயில், அதேபோல், அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் புறநகர் ரயில் என அனைத்தும்மெதுவாக ஊர்ந்து சென்றன.

Translate »
error: Content is protected !!