வீர வணக்க நாள்: மொழிப்போர் தியாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை

தாய்மொழியான தமிழ் மொழியைக் காக்க போர்க்களத்தில் தங்களையே இழந்து இன்னுயிர் நீத்த வீரர்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற பாவேந்தரின் வரிகளுக்கு ஏற்ப நம் அன்னை தமிழின் சுயமரியாதை காக்க,வீறு கொண்டு எழுந்து கடுமையாக போராடி, தங்கள் இன்னுயிரை ஈந்து, தாய் தமிழுக்கு காவல் நின்ற மொழிப்போர்  தியாகிகளுக்கு எனது  செம்மார்ந்த வீரவணக்கங்கள்’’ என தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!