புத்தாண்டின் முதல் வேலை நாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவு

புத்தாண்டின் முதல் வேலை நாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன. இன்று தொடக்கம் முதலே முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியதால் வர்த்தகம் சூடுபிடித்தது.

நண்பகலிலும் பிற்பகலிலும் சந்தைகளில் வர்த்தகம் மேலும் சூடுபிடித்தது. வர்த்தகம் முடிவடையும் போது, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 929 புள்ளிகள் உயர்ந்து 59,183 புள்ளிகளாக இருந்தது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 272 புள்ளிகள் அதிகரித்து 17,626 ஆக இருந்தது. அரசுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனத்தின்பங்குகள் ஆறு சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன.

Translate »
error: Content is protected !!