தேமுதிகவுக்கு எதிர்காலம் இல்லையா..? – விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை

தேமுதிக தலைவர் விஜயகாந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என் உடல்நிலை சற்று தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மைதான்; தேமுதிகவுக்கு எதிர்காலம் இல்லை என்று யார் நினைத்தாலும் அது தவறான கருத்து.

கட்சியை விட்டு வெளியேறுபவர்கள் இந்தப் பக்கம் பச்சை என்பதை உணரும் நாள் வரும். மூளைச்சலவை செய்யப்பட்டவர்களின் வார்த்தைகளையும் ஆசைகளையும் நம்பி தேமுதிகவை விட்டு வெளியேறுவது கட்சிக்கு செய்யும் துரோகம்.

100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது. நமது கழகம் என்றென்றும் தமிழகத்தில் வேரூன்றி இருக்கும். கழகத்தின் மீது அவதூறு பரப்புபவர்களின் வார்த்தைகளை தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம்.நமது கழகம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதற்கு தொண்டர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!