ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் இடையே மோதல்

ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இன்று காலை அப்பகுதியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

தேடுதல் வேட்டையின் போது பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதி துப்பாக்கி சூடு நடத்தினான். துரிதமாக செயல்பட்ட பாதுகாப்புப் படையினர் உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடைபெறும் பகுதியில் 2க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

Translate »
error: Content is protected !!