4 குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை – மனைவி இறந்த துக்கத்தால் நேர்ந்த சோகம்!

கர்நாடக மாநிலத்தில் தண்ணீரில் விஷம் கலந்து பெற்ற 4 குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெல்காம் மாவட்டத்தை சேர்ந்த கோபால், ஓய்வு பெற்ற ராணுவ வீரராவார். இவர் இவரது மனைவி ஜெயஸ்ரீ மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் இவரது மனைவி ஜெயஸ்ரீ கருப்பு பூஞ்சை நோய் தாக்கத்தால் அவதிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் கோபால் நீண்ட நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த வேதனை உச்சமடைய தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்து 4 குழந்தைகளையும் கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலங்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!