லகிம்பூர் வன்முறை: விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம்

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூரில், போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது அவ்வழியாக வந்த பா.ஜனதாவினர் கார் மோதியதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். அந்த காரில் மத்திய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.

மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரி நாடு முழுவதும் விவசாயிகள் இன்று ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 4 மணி வரை நீடிக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!