மதுரை காவல் துணை ஆணையர் காத்திருப்பு பட்டியலில் வைப்பு…

மதுரை காவல் துணை ஆணையர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மதுரையில் மசாஜ் செய்து கொண்டு மது அருந்தும் போது காவலர் ஒருவரை புல்லாங்குழல் ஊத வைத்து ரசித்த மதுரை ஆயுதப்படை துணை கமிஷனர் சோமசுந்தரம் சென்னை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார் என மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா தகவல் தெரிவித்துள்ளார்.

மதுரை ஆயுதப்படை துணை ஆணையராக பணியாற்றி வந்த சோமசுந்தரம் மது அருந்தும் போது மற்றொரு காவலரை புல்லாங்குழல் வாசிக்க வைத்து ரசித்த வீடியோ காட்சிகள் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் சென்னை ஆயிதப்படைக்கு மாற்றப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார் என காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!