பணம் கேட்டு தொந்தரவு, இளம்பெண் தற்கொலை

 

கணவர் வீட்டில் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் திருமணமான ஒரே ஆண்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பொட்டிதட்டி கிராமத்தைச் சேர்ந்த கதிரேசன் மகள் தமிழ்பிரபா,21,. இவருக்கும் பரமக்குடி வைகை நகரைச் சேர்ந்த  கபிலன் என்பவருக்கும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி திருமணம் முடிந்து மூன்று மாத பெண் குழந்தை உள்ளது.

குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு ரூபாய் 3 லட்சம் செலவாகி உள்ளது. இதில் தமிழ்பிரபாவின் தந்தை கதிரேசன் ஒரு லட்ச ரூபாய் கொடுத்துள்ளார்.  மீதி பணம் இரண்டு லட்ச ரூபாபையும் தருமாறு கபிலன் குடும்பத்தினர் தமிழ்பிரபாவை தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரமக்குடி ஆர்டிஓ முருகன் மருத்துவமனையில் தமிழ்பிரபாவின் உறவினர்களிடம் விசாரணை செய்தார். கணவர் வீட்டில் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் திருமணமான ஒரே ஆண்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து எமனேஸ்வரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!