மேகாலயாவில் 21 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு

மேகாலயாவில் சுமார் 21 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஆற்றில் விழுந்ததில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷில்லாங்,

தூராவிலிருந்து ஷில்லாங்கிற்கு இரவுப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து நோங்சிராமில் உள்ள ரிங்டி ஆற்றில் பேருந்து விழுந்தது. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மீட்புக் குழு மற்றும் அவசர சேவைகள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளன.

பேருந்தின் வேகமே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவரில் மோதியதாக பேருந்தில் பயணித்த ஒருவர் கூறினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!