நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

மருத்துவ படிப்பிக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வை தமிழக அரசு கடுமையா எதிர்த்து வருகிறது. ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவ சீட் கிடைப்படுத்து சிரமங்ககள் ஏற்படுகிறது என்றும், நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதனை கருத்தில் கொண்டு திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக முயற்சிகளை மேற்கொள்வோம் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டமன்றத்தில் நீர் தேர்வுக்கு எதிரான புதிய மசோதாவை தாக்கல் செய்தார். பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை அவர் விளக்கினார். இந்த மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று தரவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Translate »
error: Content is protected !!