மேற்குவங்காளத்தில் பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கொல்கத்தா மற்றும் மேற்குவங்காள மாநிலத்தின் பிற மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்தது.

கனமழையால் சாலைகள், ரயில்வே மற்றும் விமான நிலைய ஓடுபாதைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். ரயில் மற்றும் விமான சேவைகளும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கொல்கத்தா உட்பட மேற்கு வங்கத்தின் பல மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Translate »
error: Content is protected !!