மும்பை: ஆயத்த ஆடைத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!

மும்பை அருகே பிவாண்டியில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து நாசமானது.

ஆயத்த ஆடைத் தொழிலின் மையமான பிவாண்டியில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளன. விடுமுறை தினமான நேற்று இரவு ஒரு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தைத்த ஆடைகள், துணிகள், கிடங்கில் இருந்த பொருட்கள், இயந்திரங்கள் ஆகியவை தீப்பிடித்து எரிந்தன. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.விடுமுறை நாளில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

Translate »
error: Content is protected !!