புதிய கொரோனா திரிபு கண்டறியப்படவில்லை

 

தமிழகத்தில் புதிய கலப்பின கொரோனா திரிபு கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை பெசன்ட் நகரில், உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, மாணவர்கள் உருவாக்கிய மணல் சிற்ப ஓவியங்களை  ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.  அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கொரோனா முழுமையாக ஒழிக்கப்படவில்லை என்பதால், அதனை புரிந்து கொண்டு மக்கள் கொரோனா விதிகளை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை XE வகை கலப்பின திரிபு காணப்படவில்லை என்றாலும்,  தடுப்பூசி செலுத்தி பாதுகாத்துக்கொள்ள மக்கள் முன்வர வேண்டும் என கூறினார்.

 

Translate »
error: Content is protected !!