உருவானது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு..!

வங்கக் கடலில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று (சனிக்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி அங்கிருந்து நகர்ந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இன்று முதல் 16ம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்து வளைகுடாவில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 12 மணி நேரத்திற்குள் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 15ம் தேதிக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!