தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.

3-வது அலை கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் எந்தத் தடையும் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது. தேர்தலை ஒத்திவைக்க தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!