சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் சமரசம் செய்ய மாட்டேன் – மு.க.ஸ்டாலின்

சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் ஒருபோதும் சமரசம் செய்துக் கொள்ள மாட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலி ஆட்சியர்கள் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு காலை 10 மணிக்கு தொடங்கியது.இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டம் ஒழுங்கு விஷயத்தில் ஒருப்போதும் சமரசம் செய்துக் கொள்ள மாட்டேன் என தெரிவித்தார்.

மேலும் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதை கண்காணித்து, பெண்களுக்கு எதிரான குற்றங்களை அனுமதிக்க கூடாது என கூறினார்.

 

Translate »
error: Content is protected !!