வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது –   தென்கொரியா தகவல்

 

வடகொரியா, கண்டனம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக  தென்கொரியா தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

தற்போது அங்கு கொரோனா பெருந்தொற்று தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில்,  வடகொரியா கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணையை இன்று அதிகாலை செலுத்தி சோதனையிட்டுள்ளதாக தென் கொரிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தென் கொரியாவும் அமெரிக்காவும் கூட்டு இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள ஒப்புக்கொண்டுள்ள நிலையில், வடகொரியாவின் இந்த செயல்பாடு பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!