கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 84 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு – சுகாதாரத்துறை அமைச்சர்

டெல்லியில் கடந்த இரண்டு நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 84 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில், டெல்லியில் 350-க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளன.

இது குறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர், டெல்லியில் இன்று சுமார் 4,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என்றும், நோய்த்தொற்றின் விகிதம் 6 6 புள்ளி 5 சதவீதமாக உயரக்கூடும் என்றும் கூறினார். நாட்டில் இதுவரை ஒமைக்ரான் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1700 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!