தியாகராய நகர் – கண்ணகி நகர் வழித்தட பேருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பயணிகளிடம் பேருந்து சரியான நேரத்திற்கு வருகிறதா, போதுமான வசதிகள் இருக்கிறதா, மேலும் வசதிகள் தேவைப்படுகிறதா என கேட்டறிந்தார். மேலும் பெண்களிடம் மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டம் குறித்து கேட்டறிந்தார். முகவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் முதலவர் அறிவுறுத்தினார்.