குடியரசு தின விழாவை முன்னிட்டு மெரினா சாலையில் அணிவகுப்பு ஒத்திகை

நாட்டின் 73வது குடியரசு தினம் வரும் 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் இன்று மெரினா கடற்கரை சாலையில், ஆளுநரும், முதலமைச்சரும் வருவது போலவும் அவர்களுக்கு மரியாதை செய்வது போலவும் ஒத்திகை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து முப்படை வீரர்கள், தேசிய மாணவர் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, ஆர்.பி.எப், காவல்துறை, தீயணைப்பு படை வீரர்கள் உள்ளிட்டோரின் அணிவகுப்பு ஒத்திகை மற்றும் போலீசாரின் இருசக்கர வாகன அணிவகுப்பு ஒத்திகையும் நடைபெற்றது.

Translate »
error: Content is protected !!