போகிப் பண்டிகையின் போது பிளாஸ்டிக் எரித்தால் ரூ.1000 அபராதம்

போகி என்றாலே, ஒவ்வொரு ஆண்டும், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை பறைசாற்றும் வகையில், வீட்டில் பயன்படுத்தி, தூக்கி எறியும் பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி, அதனைக் கொண்டாடுவது தான்.

ஆனால், தற்போதைய சுற்றுச்சூழல் பிரச்னையில், போகி பண்டிகையின் போது, பழைய பொருட்களை, போகியில் எரிக்கக் வேண்டாம் என்று பல்வேறு தரப்பிலும் வேண்டுகோள் வைக்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் போகிப் பண்டிகையின் போது விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக், நெகிழி, டயர்களை எரித்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து மண்டலங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!