நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மனு.. உச்ச நீதிமன்றம் தள்ளுபடி..

2021ஆம் ஆண்டு நீட் தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததால், தேர்வை ரத்து செய்து மறுதேர்வு வைக்கவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, நீதிபதிகள் வெறும் 5 எஃப்.ஐ.ஆர். பதிவை மட்டும் வைத்து 7.5 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று கூறி மனு தள்ளுபடி செய்தனர்.மேலும் மனுதாரருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து மனுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என எழுந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு, அபராதத்தை ரத்து செய்தனர்.

Translate »
error: Content is protected !!