தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை..!

சென்னையில்  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து 102 ரூபாயை கடந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தனியார் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், மீண்டும் உயர்ந்து 102 ரூபாயை நெருங்கி வருவதால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு மீண்டும் 30 காசுகள் உயர்ந்து 102 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் 33 காசுகள் உயர்ந்து 98 ரூபாய் 59 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது வாகன ஓட்டிகளை கலக்கமடைய செய்துள்ளது.

Translate »
error: Content is protected !!