ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த நபரை விரைந்து காப்பாற்றிய ரயில்வே காவலர்கள்

ஈரோடு ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்தவரை போலீசார் விரைந்து வந்து மீட்டனர். செகந்திராபாத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த அசோக்தாஸ் என்பவர், ஈரோடு ரயில் நிலையத்தில் இறங்க முயன்றார். ஆனால், அதற்குள் ரயில் புறப்பட்டதால், அவர் தவறி விழுந்துள்ளார். அப்போது ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் பழனிசாமி, கிருஷ்ணன் ஆகியோர் விரைந்து வந்து அசோக்தாசை மீட்டனர்.

Translate »
error: Content is protected !!