விடிய விடிய விசாரணை… ராஜேந்திர பாலாஜியை 15 நாள் காவலில் வைக்க உத்தரவு

அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் நேற்று கர்நாடகாவில் வைத்து கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்த அவரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்து தமிழகம் அழைத்து வந்தனர். பின்னர் விருதுநகர் போலீசில் ராஜேந்திரபாலாஜி ஒப்படைக்கப்பட்டார்.

அதையடுத்து ராஜேந்திரபாலாஜி நேற்று இரவு விருதுநகர் மாவட்டத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார். அங்கு அவர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பரம்வீர் முன்பு இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ​​அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பு வாதிட்டது. ஆனால், ராஜேந்திர பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் அனுமதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ராஜேந்திர பாலாஜியை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ராஜேந்திர பாலாஜியை வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து ராஜேந்திர பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டார்.

Translate »
error: Content is protected !!