கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரஷ்ய அதிபர் புதின் தனிமைப்படுத்தியதாக தகவல்

ரஷ்யாவின் அதிபர் மாளிகை தகவலின்படி, ரஷ்ய அதிபர் புதின் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். புதினுடன் தொடர்பு கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து புடின் தன்னை தனிமைப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக புதினின் தஜிகிஸ்தான் சுற்றுப்பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் புதின் போட்டுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!