போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடிக்கப்படும்

போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வருகிற 28, 29 ஆகிய தேதிகளில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள பணியாளர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள 28, 29 ஆகிய தேதியில், போக்குவரத்து ஊழியர்களுக்கு எந்த விதமான விடுப்பும் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!