முழு நேர வகுப்புகள் தொடங்குவது தொடர்பாக நாளை பள்ளிக் கல்வித் துறையின் அலுவல் ஆய்வுக் கூட்டம்..

பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை முடிந்து முழு நேர வகுப்புகள் தொடங்குவது உள்ளிட்டவை குறித்து பள்ளிக் கல்வித் துறையின் அலுவல ஆய்வுக் கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு, திருப்புதல் தேர்வு, முழுநேர வகுப்புகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பள்ளிகளில் பழுதான கட்டிடங்களை இடிப்பது, பள்ளிகளில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த புகார்களை (புகார் பெட்டி) பதிவு செய்வது, பள்ளி வளாகங்களில் உதவி எண்கள் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

Translate »
error: Content is protected !!