புதுச்சேரியில் இன்று 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் ஏற்கனவே 9,10,11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வந்தன. அதேபோல் கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வந்தன. தொடர்மழை காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இதையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு பள்ளியை திறப்பதற்கான அறிவிப்பை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டார். அதன்படி, புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.

வாரத்தில் 6 நாட்கள் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என்றும் பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு அரை நாள் செயல்பட்டு வந்த நிலையில், இன்று முதல் முழு நேர வகுப்புகளாக மாற்றப்பட்டுள்ளது. 8 மாதங்களுக்கு பிறகு பள்ளி திறக்கப்பட்டுள்ளதால் வீட்டில் முடங்கி கிடந்த குழந்தைகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!