வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சீல்

 

 

சென்னையில் உள்ள 15 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சீல் வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியோடு நிறைவடைந்தது.

மாலை 6 மணிக்கு மேல் வாக்கு எண்ணும் மையங்களில்  கட்சி பிரமுகர்கள் முன்பு, வாக்கு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டது. குறிப்பாக சென்னையில் 200 வார்டுகளுக்கு, 5 ஆயிரத்து 794 வாக்கு எண்ணூம் மையங்களில் வாக்கு பதிவு நடைபெற்றது. இவை தேர்தல் ஆணையம் அறிவித்ததுபோல 15 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தேர்தல் அதிகாரிகள் முன்பு அவை ஒவ்வொரு அறைக்கும் எடுத்து செல்லும் பணி நேற்று மாலையிலிருந்து நடைபெற்று வருகிறது. பின்னர் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 

 

Translate »
error: Content is protected !!